
கடுகு மலையோரம் கவின்மிகு நதியொன்று....
கற்றவரும் வருவர் மற்றவரும் வருவர்
களிப்புடனே பொழுது போக்கிட....
நதியின் அடிவானத்திலே ஆங்கேயோர் அற்புத புவனம்....
படகுகளும் அறியாது...தூண்டில்களும் உணராது...
தொலைதூர பாய உலகிலே பாளும் உலகின் மாயங்கள் இல்லை...
மச்சங்களும் மிச்சங்களும் கூடியே வாழ்ந்தன...
நாசாவின் கோளொன்று உரைத்தது மெய்யுரையொன்று...
அடுத்து வரும் விண்கல்லொன்று விழுமிடம் கடுகுமலை நதிதான்...
நதி தேய பள்ளம் ஒன்று உயருமென...
சலலோகம் பதைத்தது இறுதி இராப்போசனமும் இறங்கியது விடமென...
விதியின் விடுகதை நாளும் புலர்ந்தது...
கல்லும் வந்தது....
நதியின் நீர்க்கூறுகள் வலுவான பிணைப்பொன்றை கொண்டன...
மேற்ப்பரப்பிளுவிசையதனை தாண்டி நகரவில்லை விண்கல்...
அது கரைந்தே போயிற்று கனவாக...
கவின் மிகு நதியும் பாய உலகும் இன்றும் உயிர்ப்புடன் உவகையுடன்
ஆனால் உறைப்புடன் உறுதியுடன்...
உன்னிலும் மேற்பரப்பிளுவிசைகள் மையம் கொண்டால்
நீதான் நியூட்டனின் நான்காம் விதி...
உணர்வாய் உயர்வாய்......
No comments:
Post a Comment