
மேகங்கள் யாவும் தீக்குழிக்குள்....
உயர மரங்களின் கூடல் இன்றி.....
மலை முகட்டு மரங்களும் முகில்களும் காதல்
கொஞ்சினால்தான் மண் விளையும்....
பொன் முகாமிடும் பூவையர் மேனியிலே....
சனநாயக சர்வாதிகாரிகள்
மலை முகடுகளை தேசியமாக்கினார்கள்....
மரங்களை சமவுடைமையாக்கி
சாவு மணி அடித்தார்கள் சுதேச குடிகளுக்கு......
மலைக்காடெங்கும் மனித தலைகளை விதைத்தார்கள்
தளைகளான கைத்தொழில் பேட்டைகளில்....
வருணர்கள் வித்தை காட்டினாலும்
அர்ஜுனர்கள் வில் எறிந்தாலும்...
இனி வாராது இந்திர பூசைகள்....
தகிக்கும் சூரியனையும் அணைக்க முடியாமல்....
பசுமைக்காடுகளின் நேசம் இன்றியும்
எங்கள் மேகங்கள் தீக்குழிக்குள்.
No comments:
Post a Comment